உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிரவரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் முதற் தடவையாக கூடவுள்ளனர்.

அத்துடன், இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை