அரசியல்உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று திங்கட்கிழமை (07) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாக்காளர் பதிவு விவரங்களைச் சரிபார்த்தல், ஒன்லைன் வாக்காளர் பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்களுடன் தொடர்புடைய விலைப்புள்ளிகளைக் கோருதல் உள்ளிட்ட அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை கிடைக்காது என்று ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related posts

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி – ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில்.

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் நீலாவணையில் துப்பாக்கி மீட்பு!

editor

சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor