உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 13ஐ தீர்மானியுங்கள்- ரணிலுக்கு தகவல் அனுப்பிய SLPP

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானியுங்கள்.

அதுவரையில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவதற்கு மக்கள் ஆணை கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

சர்வக்கட்சி மாநாட்டிற்கான ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் முன்னாள் நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

இதன் போது 13 ஆவது திருத்தம் குறித்தும் அதிகாரப்பகிர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டை கூட்டி பேசுவது முறையல்ல என்ற விடயத்தை முக்கிய உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

ஏனெனில் 69 இலட்சம் பெரும்பான்மையை கொண்ட உண்மையான மக்கள் ஆணை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது. கோட்டபாய ராஜபக்ஷவை முன்னிறுத்திய கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ‘சௌபாக்ய தெக்ம’ என்ற கொள்கை திட்டத்தில் 13 ஆவது திருத்தம் குறித்து எந்தவொரு உறுதிமொழியோ இல்லை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியை துறந்துள்ள நிலையில் அவருடைய பதவி காலத்தின் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாகவே ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மையை கொண்ட கட்சியாக உள்ளது.

எனவே கொள்கைக்கு எதிராக தீர்மானிக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இயலாது என்ற விடயத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பஷில் ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அஸ்கிரி மற்றும் மல்வத்து உட்பட ஏனைய உயர் பௌத்த பீடங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று இரவு வானில் தென்படவுள்ள சூப்பர் மூன்

editor

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்