உள்நாடு

தேசியப்பட்டியல் பெயர்விபரங்கள் – கால எல்லை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி,ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி – கைது செய்யப்பட்ட சாரதிகள்

ஷானி – சுகத் : மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க சிஐடிக்கு அனுமதி – கடவுச் சீட்டுக்களும் முடக்கம்