உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாகவும், காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெஹியத்தகண்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெஹியத்தகண்டிய காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

editor