சூடான செய்திகள் 1

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

(UTV|COLOMBO) அண்மையில் கொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாரான கே.ஏ.இனோக்கா ஷிரானி உரிய காசோலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு,அவரது குடும்ப உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

 

 

 

 

 

Related posts

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்

இன்றும் (22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை