உள்நாடு

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் கிரேன் இறக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹ கமகேயை நாம் தொடர்பு கொண்ட வினவிய போது, அவர் தெரிவிக்கையில் குறித்த கிரேன்கள் தற்போது கப்பலில் உள்ள நிலையில் அதற்கு நாளுக்கு கப்பல் கட்டணமாக துறைமுக அதிகாரசபை ஒரு கோடிக்கு அண்மித்த பணத்தினை செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற செயல்களால் துறைமுக அதிகாரசபை பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

உடல்நிலை சரியில்லை நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச

editor

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor