தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்துக்கு அருகில் சுகாதார அதிகாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.