உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  பிரபல பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை குறித்த பகுதிக்கு அழைத்துச் சென்றபோது பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு காவற்துறை கான்ஸ்டபிள்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்து 22 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார் – சஜித்

editor

அநுர- சஜித் விவாதம் இன்று! நடக்கப்போவது என்ன?

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்