உள்நாடு

துப்பாக்கிச் சூட்டினால் வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

சீனாவில் இருந்து வந்த விமானம் உட்பட மேலும் சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

editor

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு அச்சுறுத்தல் – அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிஸார்

editor

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் உதவி

editor