உள்நாடு

தீயினால் முற்றாக எரிந்த வீடு – உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

களுத்துறை, வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனு தாக்கல் செய்தார்

editor

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

editor

அக்கரைப்பற்று, மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

editor