சூடான செய்திகள் 1

தீப்பிடித்து எரிந்த விற்பனை நிலையங்கள்

(UTV|COLOMBO)-பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் திடீரென தீப்பரவியுள்ளது.

நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலினால் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை விற்பனை நிலையமும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீயினால் உயிராபத்து எதுவும் ஏற்படாத நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்

போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15ஆம் திகதி முதல்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு