விளையாட்டு

தில்ஹாரவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை 8 வருட தடை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) 8 வருட தடை விதித்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவருக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான தடை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி