உள்நாடு

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்புதலை நேற்று(08) அமைச்சரவை வழங்கியுள்ளது.

தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதற்கமைய திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய

editor

திரு. சாஹிரா கல்லூரி மாணவிகளின் A/L பெறுபேறு இடைநிறுத்தம் – இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு