உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 136,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியதற்காகவும் பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்து ரூ.1,250,000 மதிப்புள்ள சொத்துக்களைத் திருடியதற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

வாரியபொல : மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டது

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா