உள்நாடு

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் சில பிரதேசங்களுக்கு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய நாடளாவிய மின் தடையின் பிற்பாடு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொ​ஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை ஏலவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தல் – தாயொருவர் ஆதங்கம்.

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை – சஜித்

editor