உள்நாடு

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – ஹேகித்தை மார்க்க நீர்க்குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (31) காலை 10.00 மணி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி பிற்பகல் 04 மணி வரை சில இடங்களில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை நீர்கொழும்பு வீதி, எவரிவத்தை வீதி, தெலகபாத, மீகஹவத்தை, ஹேகித்தை, பள்ளியவத்தை, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுாவ, மருதானை வீதி, எலகந்த ஆகிய பிரதேசங்கள் மற்றும் ஹெந்தளை வீதியின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல்: ரணிலின் நிலைப்பாடு மே மாதம்

இம்ரான் கான் – பிரதமராக மாறிய ஒரு வெற்றிகரமான கிரிக்கெட்டர் வீரர்

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்