உள்நாடுபிராந்தியம்

தாய் மற்றும் மகன் மீதும் அசிட் தாக்குதல் – தாய் உயிரிழப்பு

அயகம பொலிஸ் பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அசிட் தாக்குதலால் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, அயகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாய் உயிரிழந்தார்.

அயலவர்கள் குழுவொன்றுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் குற்றம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : விசாரணை மேற்கொள்வதற்கு குழு

Shafnee Ahamed

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor