தாய்லாந்து மீது கம்போடியா நடத்திய ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.
எமரால்டு முக்கோணப் பிராந்தியத்தில் புதிதாக வன்முறை வெடித்ததற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.
தாய்லாந்தின் சூரினில் உள்ள காப் சோயெங் மாவட்டத்தில் 2 பி.எம்-21 ராக்கெட்டுகளால் கம்போடியா தாக்கியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், தாய்லாந்துதான் அமைதி ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது.
மோதல் தீவிரமடைந்ததால் 6 எஃப்-16 போர் விமானங்களை தாய்லாந்தின் ராணுவம் எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.