தாயை காப்பாற்ற தந்தை மஹிந்த மல்வத்து அஸ்கிரிய தேரர்களிடம்
உதவி கோரவில்லை என மகன் நாமல் கூறியிருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்த்த போது, சிரந்தி ராஜபக்ஷவுக்கு கைவிலங்கு மாட்ட போகிறார்கள் எனத் உளவுத்
தகவல் மஹிந்தவின் காதுகளை எட்ட
அவர் தனது மனைவியை காப்பாற்றுமாறு மல்வத்து தேரர்களிடம் மன்றாடியிருக்கிறார்.
அதாவது மனைவியை கைது செய்ய வேண்டாம் என அநுரவிடம் கூறுமாறு தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரபல ஊடகவியலாளர் சனத் பாலசூரிய எழுதி இருக்கிறார்.
ஆனால் மல்வத்து தேரர்களோ முடியாது என மஹிந்தவுக்கு கைவிரித்து இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
ஊழல்வாதிகளை கைது செய்து தண்டனை வழங்குமாறு வற்புறுத்திய தங்களுக்கு ஜனாதிபதியிடம் வாய்த்திறந்து இதனை எவ்வாறு கேட்பது என தேரர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினாராம்.
என்னவொரு பவர் புல் கர்ம வினை இது.
எந்த ராஜபக்சேக்களால் நாடு வங்குரோத்து அடைந்ததோ அந்த ராஜபக்சேக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிட முடியாதவளவுக்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வேலை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது சிரந்தி ராஜபக்ஷவின் “சிறிலியசவிய கணக்கு” பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் மகன்கள் விடயத்தில் மூக்கை நுழைக்காத மஹிந்த மனைவிக்காக களத்தில் குதித்து இருக்கிறாராம்.
இந்த ப்ளாக் & வைட் கேஸ்,
2015 ஆம் FCID இனால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிரந்தி ராஜபக்ஷவை பொலிஸார் அழைத்திருக்கிறார்.
ஆனால் ராஜபக்ஷ தரப்போ செல்லவில்லை. மஹிந்த உடனடியாக ரணிலுக்கு அழைப்பை மேற்க்கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுக்கிறார்.
இதற்கமைய சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சிரந்தியை அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க FCID க்கு கட்டளை பிறப்பிக்கிறார். இதனையடுத்து விசாரணையும் முடக்கப்படுகிறது.
அதேபோன்று தான் 2017 ஆம் ஆண்டு சிரந்திக்கு கைவிலங்கு மாட்டுவதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. ஆனால் அது நடக்கவில்லை.
சிரந்தியின் பொறுப்பில் இருந்த டிபென்டர் ரக வண்டியே வசீம் தாஜுதீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இது தொடர்பில் அப்போது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறிலியசவிய கணக்கு திறக்கப்படுகிறது. போலியான ஆவணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதில் பல கோடிக்கணக்கான பணம் வைப்பு செய்யப்படுகிறது. எவன்கார்ட் பணமும் உள்ளடக்கம். இது பாரதூரமான விடயம் என்பதனாலேயே ரணிலுக்கு மஹிந்த நேரடியாக அழைப்பை விடுக்கிறார்.சிரந்தி பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் சபாநாயகர் இல்லத்தில் வாக்குமூலம் வழங்குகிறார்.
மஹிந்த ரணிலுக்கு இடையில் மலைக்கணக்கு டீல்.இந்த டீலை வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சித்த ஷானியும் அப்போது ரணிலால் பல சந்தர்ப்பங்கள் மூக்குடைந்து போனார்.
எது எப்படியோ இத்தனை வருட கால அரசியல் தலையிடிகள் தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு கிடையாது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகள் பிடிக்கும் இந்த சமரில் அநுரவிடம் தேரர்கள் எவ்வாறு பின்வாங்குமாறு கூற போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க,
மக்கள் பணத்தை தின்று ஏப்பம் விட்டிருக்கும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கங்கனம் கட்டிருக்கும் அநுர அரசிடம் இந்த ஆட்டத்தை நிறுத்தங்கள் என எவரால் கூற முடியும்?
முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த காலப்பகுதியில் ஜனாதிபதி,
பிரதமர், அமைச்சர்கள் என உயர்மட்டத்தில் இருந்தவர்கள் தங்களுக்கு என தனி ராஜ்ஜியங்களை அமைத்து அதிசொகுசு வாழ்க்கை வந்தார்கள்.
ஆனால் கருமப்பலன் இவர்களை தற்போது வாட்டி வைத்து கொண்டு இருக்கிறது.
இவர்கள் நாள்தோறும் பொலிஸ் நிலையங்கள், இலஞ்ச ஊழல் திணைக்களம், நீதிமன்றங்கள் என அழைந்து திரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
நல்லாட்சி எனும் கோமாளி அரசாங்கத்தில் அமைச்சர்கள் மாத்திரமே விசாரணை அழைக்கப்படார்கள்.
கோட்டபாயவை ஒரு தடைவை சி.ஐ.டிக்கு அழைத்ததிற்கே பூகம்பம் வெடித்தது.
மஹிந்தானந்த, நளின் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்கள்.
கெஹெலிய,நாமல், சமல் என வரிசையில் சிலர் இன்றோ, நாளையோ என நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். இப்போது சிரந்திக்கும் இதுவே நிலைமை.
சிரந்திக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.