உள்நாடு

தானிஸ் அலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கடந்த 13ஆம் திகதி ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, கடந்த 26ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு