உள்நாடு

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடத்திற்கு தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிக்க பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

Related posts

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு