உள்நாடு

தம்மிக்கவின் இறுதி முடிவு இன்று

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் பிரகாரம், பசில் ராஜபக்ஷவை வெற்றிடத்திற்கு நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் பெரும் எண்ணிக்கையானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகுவாரா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (25) எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாகவும், இதில் பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தம்மிக பெரேரா பதவி விலகினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பொதுஜன முன்னணியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகே மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் எஸ்.அமரசிங்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அவருக்கு அந்த பதவியை வழங்குமாறு அதிகமானோர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கைக்கு வரவிருந்த உப்பு கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

editor

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

ஜனாதிபதி அனுரவுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது – ரிஷாட் MP

editor