உள்நாடுவணிகம்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று (05) மீள திறக்கப்பட்டது.

அதிகாலை 05 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரம் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்றும் (05) நாளையும் (06) மாத்தளை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாத்திரம் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

Breaking News : இளம் முஸ்லிம் வர்த்தகர் கொலை : கொழும்பில் சற்றுமுன் சம்பவம்

தனிமைப்படுத்தல் பகுதி : அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்