விளையாட்டு

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வுள்ளாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவ நிபுணர்

133 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா முன்னிலையில்