தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட தலைச்சுற்று காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையின் படி,நேற்று ( 21) காலை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஸ்டாலினுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைச்சுற்று ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.