வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் 85 கடற்றொழிலாளர்கள் தடுப்பில் உள்ளனர்.

அவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது

அதேநேரம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

Navy apprehends Indian fishermen for poaching in Lankan waters

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழப்பு

மொழித் திறன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – அனுப பஸ்குவல்