அரசியல்உள்நாடு

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

712,318 அரச துறை ஊழியர்கள் 2024 இல் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 76,977 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலம் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழாவும் நடைபவனியும் பேரணியும்..!

“எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம்”