உள்நாடு

தனியார் பிரத்தியேக வகுப்புகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நவம்பர் முதலாம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்தார்.

அத்துடன், மத வழிபாடுகளை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

   

Related posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அமுலாகும் புதிய சட்டம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

40 மே தினக்கூட்டங்கள்; பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு