உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 577 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் வானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த 1,796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பது யூடியூபருக்கு எப்படி தெரியும்? – சஜித் பிரேமதாச

editor

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

இந்த வாரத்தினுள் புதிய பிரதமர் – ஜனாதிபதி