உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (03) கம்பளையில் 112 பேரும், கண்டியில் 52 பேரும், மாத்தளையில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 165 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு