சூடான செய்திகள் 1

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்

(UTV|COLOMBO) தனமல்வில பகுதியில் நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதான இளைஞனொருவர் காயமடைந்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர், பிணை வழங்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு பிற்போடப்பட்டது

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது – சட்டமா அதிபர் தெரிவிப்பு

editor