மதவாச்சி, கடவத்கம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதலில் 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் தலையில் பலத்த காயங்களுடன் வீட்டின் தோட்டத்தில் கிடந்தார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது இளைய மகன் அவரைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சம்பவத்துக்கு முன்பு பாதிக்கப்பட்டவர் தனது மூத்த மகனுடன் மது அருந்தியிருந்தியுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக மகன் தனது தந்தையை தாக்கியதால் காயங்கள் ஏற்பட்டு தந்தை உயிரிழந்துள்ளார்.
42 வயதான சந்தேக நபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
