உள்நாடு

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

உடுவர ரயில் கடவையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான ரயில் சேவை இன்று (2) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை – பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பதுளை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி உடுவர பகுதியில் உள்ள ரயில் கடவையில் மண்மேடு சரிந்து விழுந்தது.

இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

Related posts

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

ரணிலை கைது செய்வதோ குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமில்லை – உதய கம்மன்பில

editor

ஏப்ரல் 21 : இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை