உள்நாடு

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

உடுவர ரயில் கடவையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான ரயில் சேவை இன்று (2) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை – பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பதுளை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி உடுவர பகுதியில் உள்ள ரயில் கடவையில் மண்மேடு சரிந்து விழுந்தது.

இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

Related posts

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது