உள்நாடு

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விளக்கம்

(UTV | கொழும்பு) – ஃபைசர் மற்றும் மொடர்னா கொவிட் -19 தடுப்பூசிகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

Related posts

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் படுகாயம் | வீடியோ

editor

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு