சூடான செய்திகள் 1

தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்க ஆபரண தொகையுடன் மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க ஆபரண தொகையின் பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

 

Related posts

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு 07 பேர் கொண்ட குழு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது