உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் இரு சடலங்களும் மீட்பு!

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவரும் உயிருழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – மைத்துனர் கைது

editor