சூடான செய்திகள் 1

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-இந்த வருடம், தகவல் தொழில்நுட்பக் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய மத்திய கல்லூரியின் 75ஆவது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், ஆங்கில மொழிக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான தேவையும் காணப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில்

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்