சூடான செய்திகள் 1

டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)  மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளதுடன் குறித்த இந்த மாவட்டங்களில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் , டெங்கு நுளம்பு அதிகம் பரவும் மாவட்டங்களுக்கு விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை-நாடுமுழுவதும் 1790 பேர் கைது

காலநிலையில் மாற்றம்…

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது