சூடான செய்திகள் 1

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்வதேச மகளிர் தினம் இன்று

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை