டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்கள் இந்த மாதம் 20 ஆம் திகதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
