உள்நாடு

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

(UTV | கொழும்பு) – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார்.

அது அடுத்த மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டாலர்களைப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு வழங்கப்படவுள்ளதாக கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

Related posts

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

editor

ரணிலுக்கும், மொட்டு எம்பிக்களுக்கும் முக்கிய சந்திப்பு!

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு