அரசியல்

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (18) அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 2.00 மணிக்கு ஜப்பானில் Tsukuba இல் Yatabe Citizen Hall இல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலரையும் அநுர குமார திசாநாயக்க சந்திக்கவுள்ளார்.

Related posts

மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை – தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ்

editor

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்

editor

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.