உள்நாடு

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையே இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்திப்பை கடந்த 21 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் அந்த சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை