அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை) 5,214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,656 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 3,415 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 33 முறைப்பாடுகளும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு ஏனைய விடயங்கள் தொடர்பில் 109 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன் எரிபொருள் அளவினை சரிபார்க்கவும் – RDA

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்