உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

(UTV | கொழும்பு) –    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அதிகாரத்திற்காக போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வார்கள் என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தம்மிக பெரேரா தனது கொள்கைகளை தயாரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்களுக்கு விளக்குவதற்கு 60 நாட்கள் மட்டுமே தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும் வறட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் கவனம் செலுத்த வேண்டும்