நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்’ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டமொன்றை ஆரம்பித்தது.
தேசிய பாடசாலைகளில் 3 வருட சேவையை பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சலுகை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் 2025 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளைச் சந்தித்து வினவிய போதிலும் தமக்குத் தீர்வு வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், தமது பிரச்சினைக்கு எழுத்துப்பூர்வமான தீர்வை வலியுறுத்தி தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அவர்கள் தமது பிள்ளைகளுடனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இப்போராட்டத்தில் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
