அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டாரவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை (கௌரவ) பட்டம், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி (கௌரவ) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் விரிவுரையாளரும் ஆவார்

Related posts

இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட வாகன உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது – தேசிய கணக்காய்வு அலுவலகம்

editor

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டியில் தம்பலகாமம் பிரியந்த குமார வெற்றி!

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்