ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி மாலைதீவு செல்வது பதவியேற்றதிலிருந்து ஆறாவது வெளிநாட்டு விஜயமாகும்.
இந்த விஜயமானது இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் மாலைதீவின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காகவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.