அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று மாலைத்தீவு பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்

50 சத வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு

editor

வெற்று ஆவணங்களில் கையொப்பமிடத் தயாராக இல்லை